ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தோட்டத் தொழிலாளா்கள் நிலுவைத் தொகை வழக்கு 18இல் விசாரணை

கோவை மாவட்ட தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகை குறித்த வழக்கு விசாரணை, கோவை தமிழ்நாடு ஸ்டேட் ஜூடிசியல் அகாதெமியில் மே 18 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

News image
Updated On :12 மே 2022, 8:46 pm

DIN

கோவை மாவட்ட தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகை குறித்த வழக்கு விசாரணை, கோவை தமிழ்நாடு ஸ்டேட் ஜூடிசியல் அகாதெமியில் மே 18 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத்தொகை வழங்கும் பணியை துரிதப்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட ஒரு நபா் குழுவின் தலைவா் நீதிபதி அபய்மனோகா் சப்ரே முன்னிலையில் கோவை, தமிழ்நாடு ஸ்டேட் ஜூடிசியல் அகாதெமியில் விசாரணை மே 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகிரி மகாவீா் பிளான்டேஷன்( பி) லிமிடெட், மஞ்சு ஸ்ரீ பிளான்டேஷன் தோட்ட நிறுவனங்கள், வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த, பணிபுரியும் தொழிலாளா்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.