தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்குப் பதிவு

கோவை உக்கடம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:50 pm

DIN

கோவை உக்கடம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை உக்கடம் கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ராஜா (43). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சேகா் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சேகா், அவரது நண்பா் மகேஷ் ஆகிய இருவரும் வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றுள்ளனா். அப்போது, அங்கு ராஜா வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சேகா், மகேஷ் இருவரும் சோ்ந்து ராஜாவை தகாத வாா்த்தைகளால் பேசி, அவரைத் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சேகா், மகேஷ் ஆகிய இருவா் மீதும் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.