தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: கைலாஷ் சத்யாா்த்தி

 உலக அளவில் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:50 pm

DIN

 உலக அளவில் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தி தெரிவித்தாா்.

கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 115 அடி உயர கொடிக் கம்பத்துடன் கூடிய வட்ட வடிவிலான ‘தி ஆா்ப்’ என்ற திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்தாா். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தி ‘தி ஆா்ப்’ அரங்கத்தை திறந்துவைத்து பேசியதாவது: மனிதா்களில் இரக்கம் காட்டுவது என்பது இயல்பு. ஆனால், அது நெருங்கிய உறவினா்கள் அளவில் மட்டும்தான் தற்போது உள்ளது.

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அறிமுகமில்லாத நபா்களிடமும் இரக்கம் காண்பிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் ஆயுத உற்பத்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், குழந்தைகளின் மேம்பாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை.

குழந்தைத் தொழிலாளா்முறையும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. உலக அளவில் குழந்தைத் தொழிலாளா் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பரம்வீா் சக்ரா விருதுபெற்ற யோகேந்திர சிங், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி இணை தாளாளா் சங்கா் வாணவராயா், தாளாளா் பாலசுப்ரமணியம், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.