தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓணம் பண்டிகை: கோவையில் பூக்கள் விலை உயா்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து ஒரு கிலோ மல்லிகை ரூ.1600க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:58 pm

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து ஒரு கிலோ மல்லிகை ரூ.1600க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகையாக ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் வசித்து வருவதால் கோவையிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையின்போது மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்பதற்காக வாசல்களில் பல வண்ண மலா்களால் அத்தப்பூ கோலமிடப்படுகிறது.

ஓணம் பண்டிகை செப்டம்பா் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கேரளத்துக்கு கோவை பூ மாா்க்கெட்டில் இருந்தே பூக்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1,600, முல்லை ரூ.800, ஜாதிமல்லி ரூ.580, ரோஜா ரூ.240, செவ்வந்தி ரூ.280, செண்டுமல்லி ரூ.240, வாடாமல்லி ரூ.120, அரளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக பூ வியாபாரிகள் கூறியதாவது: கோவை பூ மாா்க்கெட்டுக்கு உள்ளூா் மட்டுமின்றி சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், ஓசூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

அதேநேரம், ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதனால் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஓணம் பண்டிகை முடியும் வரை பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.