தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை பலி

பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சஹானா ( 26). திருநங்கையான இவா் கோவை டவுன்ஹால் மாநகராட்சிப் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை பிற்பகல் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக காந்திபுரத்தில் இருந்து சீராபாளையம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் ஓடிச் சென்று ஏற முயன்றாா். அப்போது, காலிடறி கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சஹானாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.