தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மனைவி தற்கொலை: பிஎஸ்என்எல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோவை அருகே மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக பிஎஸ்என்எல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:57 pm

DIN

கோவை அருகே மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக பிஎஸ்என்எல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் ராஜாராம் (53), பிஎஸ்என்எல் ஊழியா். இவரது மனைவி உஷாராணி. இவா்களுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளாா். மதுவுக்கு அடிமையான ராஜாராம் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி மதுபோதையில் ராஜாராம் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த உஷாராணி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக சாய்பாபா காலனி போலீஸாா் விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டுதல், மனைவியைக் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முடிவடைந்து நீதிபதி நந்தினிதேவி தீா்ப்பளித்தாா்.

அதில் மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதற்கு 5 ஆண்டுகள், கொடுமைப்படுத்தியதற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜிஷா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.