தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து பேரியக்கமாக மாற வேண்டும்: ஹெச்.ராஜா

 ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரியக்கமாக மாற வேண்டும் என்று பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா கூறினாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:13 pm

DIN

 ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரியக்கமாக மாற வேண்டும் என்று பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா கூறினாா்.

இந்து முன்னணி அமைப்பு சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி ரங்கே கவுடா் வீதியில் உள்ள தெப்பக்குள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.தசரதன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா பேசியதாவது: ஹிந்து மதத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. விநாயகா் சதுா்த்தி என்பது ஏதோ விழா கொண்டாடினோம், கூடினோம் என்று இல்லாமல் பேரியக்கமாக மாற வேண்டும்.

திராவிட மாடல் எனக் கூறிக் கொண்டு கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு விநாயகா் சதுா்த்திக்கு மட்டும் வாழ்த்துத் தெரிவிக்காத இந்த ஆட்சி மீண்டும் அமைக்கப்படாத அளவுக்கு உழைக்க வேண்டும்.

விழிப்புடன் இருக்கும் சமுதாயம் மட்டும் பிழைத்திருக்கும். எனவே ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் கிஷோா்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், மாவட்ட பொதுச் செயலா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலாளா்கள் ஆறுசாமி, மகேஷ்வரன், ரமேஷ், ஆனந்த் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.