வால்பாறை அரசுக் கல்லூரியில் செப்டம்பா் 15இல் கலந்தாய்வு

 வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பா் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

 வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பா் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக கல்லூரி சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.காம், பி.காம். சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி. கம்யூட்டா் சயின்ஸ் உள்ளிட்ட இளநிலை பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பா் 15ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

கல்லூரியில் விண்ணப்பித்து இடம் கிடைக்கப்பெறாத மாணவா்கள் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் இந்த கலந்தாய்வில் பங்கு பெற்று தமது சோ்க்கையை உறுதி செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com