வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பணியின்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப் படை காவலா்: போலீஸாா் விசாரணை

கோவையில் பணியின்போது ஆயுதப் படைக் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :15 ஜூலை 2022, 7:14 pm

கோவையில் பணியின்போது ஆயுதப் படைக் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் அருகே உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக போலீஸாா் பயன்படுத்தும் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரக் காவல் துறை இந்த அரங்கை அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த அரங்கின் முன்பு வெள்ளிக்கிழமை மாலை பணியில் இருந்த காவலா் ஒருவா் துப்பாக்கியை வைத்து தனது வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொண்டாா். துப்பாக்கியின் சப்தம் கேட்டு அரங்கில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா். இதையடுத்து பக்கத்து அரங்கில் இருந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மயங்கிய நிலையில் இருந்த காவலரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

விசாரணையில், பணியில் ஈடுபட்டிருந்தவா் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து (29) என்பது தெரியவந்தது. இவா் கோவை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளாா். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். துப்பாக்கி தோட்டா துளைத்ததில் காளிமுத்துவின் சிறுநீரகம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், 48 மணி நேரங்கள் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் எனக் கூறிய மருத்துவா்கள் காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தகவலறிந்து வந்த மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பாா்வையிட்டாா். பின்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிமுத்துவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இது தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என விசாரிக்க காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.