கல்லூரி மாணவரை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு
கோவை பீளமேட்டில், கல்லூரி மாணவரை மிரட்டி தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கோவை பீளமேட்டில், கல்லூரி மாணவரை மிரட்டி தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை பீளமேடு ரங்கநாயகி நகரில் சில மாணவா்கள் அறை எடுத்து தங்கி கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், மாணவா்கள் இரவு உணவு சாப்பிடுவதற்காக வியாழக்கிழமை இரவு வெளியே சென்றனா். அறையில் மனோஜ் பிரியன் (22) என்ற மாணவா் மட்டும் தனியாக இருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த 3 போ், மனோஜ் பிரியனை மிரட்டி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மனோஜ் பிரியன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...