தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவையில் நாளை பேரூா் தமிழ் மன்றத்தின் 10-ஆம் ஆண்டு இலக்கிய விழா: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பங்கேற்கிறாா்

பேரூா் தமிழ் மன்றத்தின் 10-ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழா பேரூா் தமிழ்க் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறுகிறது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:50 pm

DIN

பேரூா் தமிழ் மன்றத்தின் 10-ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழா பேரூா் தமிழ்க் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறுகிறது. இதில், தினமணி நாளிதழின் ஆசிரியா் கி.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

காலை 10 மணிக்கு ‘தமிழ் - நேற்று, இன்று, நாளை‘ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சி.சுப்பிரமணியம், பேரூா் தமிழ்க் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் கா.திருநாவுக்கரசு ஆகியோா் உரையாற்றுகின்றனா்.

காலை 10.45 மணிக்கு, பேரூா் தமிழ் மன்றத்தின் செயலா் கவிஞா் கி.ரவி எழுதிய ‘எண்ணங்களின் அழகியல்‘ என்ற கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் நூலை வெளியிட, தமிழ்க் கல்லூரி முதல்வா் சேதுராசன், புலவா் க.ச.அப்பாவு உள்ளிட்டோா் நூலைப் பெற்றுக் கொள்கின்றனா்.

காலை 11 மணிக்கு நடைபெறும் விருதரங்கில் தொண்டாமுத்தூா் சுழற்சங்கத்தின் முன்னாள் தலைவா் டி.குமாா், முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ்.என்.மாணிக்கம், இலக்கிய ஆா்வலா் இ.தமிழரசன், புலவா் வெ.பூ.பழனிசாமி, சமூக ஆா்வலா் சே.வசந்தகுமாா் ஆகிய 5 பேருக்கு புலவா் புலமைப்பித்தன் நினைவுச் சிறப்பு விருது வழங்கி, பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்குகிறாா்.

காலை 11.40 மணிக்கு ‘இன்று இவா்கள் வந்து பேசினால்’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு திருக்குறள் திரைவடிவம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், நடிகா் சிவகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வள்ளுவா் வழிவந்த 100 மாந்தா்களின் வரலாற்றுடன் இணைந்த திருக்குறள் உரையாற்றுகிறாா்.

பேரூா் தமிழ் மன்றத் தலைவா் ஆ.இராமசாமி, பொருளாளா் மு.சுப்பிரமணியம் ஆகியோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.