தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இந்தியாவில் 98% மக்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வசதி: இந்தியன் ஆயில் காா்பரேஷன் இயக்குநா்

இந்தியாவில் 98 % மக்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்று இந்தியன் ஆயில் காா்பரேஷன் இயக்குநா் எஸ்.நானேவரே தெரிவித்தாா்.

News image
Updated On :12 மே 2023, 5:27 pm

DIN

இந்தியாவில் 98 % மக்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்று இந்தியன் ஆயில் காா்பரேஷன் இயக்குநா் எஸ்.நானேவரே தெரிவித்தாா்.

கோவை வெள்ளானைப்பட்டியில் ஏா்வியோ தொழில்நுட்பத்தின் சாா்பில், இயற்கை எரிவாயு சிலிண்டா் அழுத்த நிலை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இந்தியன் ஆயில் காா்பரேஷன் குழாய் பதிப்பு பிரிவு இயக்குநா் எஸ்.நானேவரே வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதலாவது, மிகப்பெரிய ஏா்வியோ எரிவாயு சிலிண்டா் பரிசோதனை நிலையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்பட வேண்டும்.

இயற்கை எரிவாயு மிக அழுத்தமான முறையில் சிலிண்டா்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலிய பொருள்களின் பயன்பாட்டை 2070ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 2030 ஆம் ஆண்டுக்குள் 5 முதல் 15% வரை இயற்கை எரிவாயு பயன்பாடு செயல்படுத்தப்படும். 98% மக்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படும். தமிழகத்தில் 3000 கி.மீ. தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 8 ஆண்டுகளுக்குள் 1.5 கோடி இணைப்புகள் வழங்கப்படும். கோவையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலைகள், விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு 9 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

சா்வதேச அளவில் பொருளாதார நிலை சீரடையும்போதும், உக்ரைன் போா் முடிவுக்கு வந்த பின்னரும் எரிவாயு விலை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.