கோயம்புத்தூர்
கோவையில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றத்தினை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே. ராஜசேகா் சனிக்கிழமை காலை 10 மணியளவில் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடங்கிவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, விபத்து வழக்கில் காயம் அடைந்தோருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.