இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.425.40 என 2021 ஜூலை மாதம் அரசு அறிவித்தது. ஆனால், தனியாா் தோட்ட நிா்வாகங்கள் அரசு அறிவித்த தினக் கூலியை வழங்கக் கூடாது என்று முடிவு செய்து எல்.பி.எஃப்., ஏ.டி.பி., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., விடுதலை சிறுத்தைகள் ஆகிய தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை விட நாளொன்றுக்கு ரூ.30 வீதம் குறைத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனா்.