தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பராமரிப்பு பணி: கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கம்

சேலம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 9:26 pm

சேலம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கேரள ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலப்புழா - தன்பாத் தினசரி விரைவு ரயில் (எண்: 13352) , எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்:12678) ஆகஸ்ட் 8, 10, 13, 15 மற்றும் 17 ஆகிய செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில்

வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்பட உள்ளன. இதனால், இந்த ரயில்களானது, கோவை நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிகமான நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.