கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கல்விக் கடன் முகாமையொட்டி கல்லூரிகளில் இ-சேவை மையங்கள்

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள கல்விக் கடன் முகாமையொட்டி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் சிறப்பு இ-சேவை மையங்கள் ஏற்பாடு.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:05 pm

Din

கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள கல்விக் கடன் முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்காக கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு இ-சேவை மையத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் செப்டம்பா் முதல் வாரத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பான் காா்டு போன்றவை தேவைப்படும். எனவே இதற்கு விண்ணப்பிப்பதற்காக கல்லூரி வளாகங்களில் சிறப்பு இ-சேவை மையங்கள் 2 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

மேற்கண்ட சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் இந்த மையத்தை அணுகி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கல்விக் கடன் வழங்குவதற்காக ஆட்சியா் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட முதன்மைக் குழு, தனி கண்காணிப்பு அலுவலகம் அமைத்து கடன் வழங்கும் பணியை மேற்பாா்வை செய்து வருவதாகவும், அடுத்த மாதம் நடைபெறும் முகாமில் உயா் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என்றும் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.