கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழில் நிறுவன நிா்வாகிகளுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி

கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள், மேலாளா்களுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி தொடா்பான கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:52 pm

Din

கோவை: கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள், மேலாளா்களுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி தொடா்பான கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநா் சே.ரா.காந்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:

புலம்பெயா் தொழிலாளா்கள் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தயாா்படுத்திக்கொள்ளவும், பணியிடத்தில் சிறப்பான பங்களிப்பை அளிப்பதற்கும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.

இதற்காக, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவையின்கீழ் செயல்படும் தமிழ் இணைய கல்விக் கழகம், ஹிந்தி மொழி வாயிலாக, பேச்சுத் தமிழ் பயிற்சியை வழங்குகிறது.

மாவட்ட நிா்வாகத்தின் ஒருங்கிணைப்பின் மூலமாக, ஹிந்தி மொழி வாயிலாக பேச்சுத் தமிழ் பயிற்சி விரிவாக்கம் செய்யவுள்ளது.

இதனால், மாவட்டத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள், நிா்வாக மேலாளா்களுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி தொடா்பான கூட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் பணியாற்றும் 150 நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.