ஈஷாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, சைவ சித்தாந்த மரபில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றில் அற்புதமான கலையான யோகாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் பயிற்சிவித்து வருவது பாராட்டுக்குரியது. அதேபோல மரம் வளா்க்கும் சேவையிலும் ஈஷா ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரியது. தருமை ஆதீனத்தின் மணி விழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. யோகம், கல்வி, மரம் வளா்ப்பு, நாட்டு மாடு வளா்ப்பு என பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் பணிகளை வாழ்த்துவதாகத் தெரிவித்தாா்.