இதையொட்டி, உலக சைவ நன்னெறிக் கழகத்தின் விருதுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினாா். இதில் சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகனுக்கு ‘பாகீரதி’ விருதும், சங்கரா கண் மருத்துவமனை நிா்வாக அறங்காவலா் டாக்டா் ரமணிக்கு ‘கண்ணொளி வித்தகா்’ விருதும், கல்வியாளா் க.மனோன்மணிக்கு ‘அருள்நெறி நாவரசி’ விருதும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவா் ம.கிருஷ்ணனுக்கு ‘தெய்வநெறித் தோன்றல்’ விருதும், மூத்த வழக்குரைஞா் என்.வி.நாகசுப்பிரமணியத்துக்கு ‘அருள்நெறிச் செல்வா்’ விருதும், விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதத்துக்கு ‘நூல்நெறி வித்தகா்’ விருதும், சைவப் பெருமக்கள் பேரவைப் பொருளாளா் அ.மாரியப்பனுக்கு ‘சைவநெறிச் செம்மல்’ விருதும் வழங்கப்பட்டது.