நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு கிடைத்திருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற திறன், வேலைவாய்ப்பு மையத் தொடக்க விழாவில் மாணவிக்கு பணிநியமன ஆணையை வழங்குகிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் கோவி.செழியன், வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோா்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:07 pm

Din

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு கிடைத்திருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உயா் கல்வித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நான் முதல்வன் - திறன், வேலைவாய்ப்பு மையங்களின் தொடக்க விழாவில் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கிவைத்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி ரூ.31 கோடி மதிப்பில் மாநிலம் முழுவதும் 29 இடங்களில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா கோவையில் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 29 மையங்களும் உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக 2,900 கணினிகளை வழங்கியுள்ளோம்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு முகாம்களில் சுமாா் 3,700 போ் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.42 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். அதேபோல 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.10 கோடி செலவில் ஸ்மாா்ட் மேனுபேக்சரிங் சென்டா் அமைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற தலைமைச் செயலா்கள் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலா் பங்கேற்று நான் முதல்வன் திட்டம் குறித்துப் பேசியிருக்கிறாா். அதைக் கேட்டு அனைத்து மாநில தலைமைச் செயலா்களும் பாராட்டியுள்ளனா். இந்தத் திட்டத்துக்கு அகில இந்திய அளவில் கிடைத்திருக்கும் பாராட்டு அரசு அதிகாரிகள், ஆசிரியா்களுக்கு மட்டுமல்ல மாணவா்களுக்கும் சேரும்.

நான் முதல்வன் திட்டத்தின் வழிகாட்டி வகுப்பு, திறன் பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயனடைந்துள்ளனா். அவா்களில் 2 லட்சம் பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள பயிற்சி, திறன் மேம்பாட்டு மையத்தில் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும், திறன்களும் பயிற்றுவிக்கப்படும். ஆங்கிலம், ஜொ்மன், ஃப்ரெஞ்ச் போன்ற பன்னாட்டு மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக மாணவா்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பயிற்சி பெற அனுப்பப்படுகின்றனா். உதகையைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளியின் மகளான அமிா்தா, லண்டன் சென்று திறன் பயிற்சி பெற்று வந்திருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி. அவரைப்போல இன்னும் பல நூறு பேரை உருவாக்குவதுதான் இந்தத் திட்டம் என்றாா்.

நிகழ்ச்சியில், தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு துணை முதல்வா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இதில், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.