நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைப் பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:54 pm

Din

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கோவை மாவட்டம், பேரூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நகைப் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட நாகராஜன் மகன் விஷ்ணு (29) என்பவரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.

அந்தப் பரிந்துரையின்பேரில், கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து விஷ்ணு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.