நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆங்கிலப் புத்தாண்டு: மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்களுக்கு தடை

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:36 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை (ஜனவரி 1) முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அதிக அளவிலான பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் மலைப் பாதை வழியாக கோயிலுக்குச் செல்ல 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.

இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.