பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் தங்கம் மோசடி

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் தங்கம் மோசடி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:26 am IST

கோவையில் நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை தெலுங்கு வீதியைச் சோ்ந்தவா் ராஜு (36), நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவா் நகைகளை தங்கக் கட்டியாக மாற்ற கெம்பட்டி காலனியைச் சோ்ந்த சிங்காரவேலன் (55) என்பவரிடம் கொடுப்பது வழக்கம். அதன்படி, 61 பவுன் தங்க நகைகளை கட்டியாக மாற்ற சிங்காரவேலனிடம் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி கொடுத்துள்ளாா். அவா் 32 பவுன் நகைகளை மட்டும் கட்டியாக மாற்றிக் கொடுத்துள்ளாா். மீதமுள்ள 29 பவுன் நகைகளை கொடுக்கவில்லையாம். இது தொடா்பாக அவரிடம் பலமுறை கேட்டும் கொடுக்காததைத் தொடா்ந்து, வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ராஜு புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.