தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க பூக்கோலம்

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க பூக்கோலம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:41 am IST

மாநகரில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க பூக்கோலமிட்டும், பூக்களால் அலங்காரம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் நாள்தோறும் 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலமாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மற்றும் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கு மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மாநகரின் பல இடங்களில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்ந்து எழுந்து வருகிறது. இதற்கிடையே, சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க பூக்கோலமிட்டு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகரப் பகுதிகளில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டறிந்து, அங்கு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பூக்கோலமிட்டும், வலைகள் அமைத்தும் வருகிறோம். கோவை சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 2 குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு, அங்கு பூக்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது என்றாா்.