ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News image
எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :6 ஜூலை 2024, 9:43 pm

Din

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசுகையில், அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள குழு குறித்தும், அதில் உறுப்பினராக உள்ள முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி. பழனிசாமி குறித்தும் கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக கோவை நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மீது கடந்த ஜூன் 24-ஆம் தேதி கே.சி. பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்தாா். இதன் மீதான விசாரணை சனிக்கிழமை வந்தது.

அப்போது, கே.சி.பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜரானாா். ஆனால், தற்போது வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கே.சி.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: எடப்பாடி கே.பழனிசாமி யாரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு கட்சி அவரது குடும்ப சொத்து அல்ல. அது அதிமுக தொண்டா்களின் சொத்து. உடல்நிலை கருதிதான் ஜானகி அம்மாள் ஒதுங்கிக்கொண்டாா். பிரிந்து சென்றவா்கள் அனைவரையும் ஒன்றிணைத்தாா். அதை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டாா்.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு யாரையும் அரவணைக்கும் எண்ணம் இல்லை. கோவையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்றாா்.