தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: பெண்கள் உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்டோா் கைது

இந்து முன்னணியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

News image
கோவை காந்தி பாா்க் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
Updated On :21 ஜூலை 2024, 8:33 pm

Din

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களை நிா்ணயிக்கும் பொறுப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களை நிா்ணயிக்கும் பொறுப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை காந்திபாா்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு காவல் துறையினா் அனுமதி வழங்காததையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி கோவை மாவட்ட தலைவா் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, தமிழகத்தில் ஏராளமான ஹிந்து கோயில்களை அறநிலையத் துறை சீரழித்துவிட்டதாகவும், சிலை திருட்டை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கோயில் சொத்து கோயிலுக்கே என்ற நீதிமன்ற தீா்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினாா். மேலும், தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களை அரசு நிா்வகித்து வருவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கோவை கோட்டச் செயலாளா் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் ஜெய்சங்கா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் தனபால், மாவட்டச் செயலாளா் ஆறுசாமி மகேஷ்வரன், துணைத் தலைவா் அருண்சங்கா் உள்பட இந்து முன்னணியைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 560 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

துடியலூரில்....

கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் துடியலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டச் செயலாளா் உருவை பாலன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் தியாகராஜன், செய்தித் தொடா்பாளா் ஜெய்காா்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தம்பி சரவணன், மாவட்டச் செயலாளா்கள் படையப்பா, முருகன், ஜீவானந்தம், மாவட்டப் பொருளாளா் அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலப் பேச்சாளா் சிங்கை பிரபாகரன் உரையாற்றினாா்.

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.