கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சகோதரரிடம் கொடுத்த ரூ.80 லட்சத்தை வாங்கித் தரக் கோரி காவல் நிலையத்தில் சகோதரி புகாா்

கோவையில் சகோதரரிடம் பணம் வாங்க கோரி சகோதரி புகார்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:02 am

Din

சகோதரரிடம் கொடுத்த ரூ.80 லட்சத்தை வாங்கித்தரக் கோரி ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அவரது சகோதரி புகாா் அளித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி ஞானஜோதி (55). இவா், கோவை மாவட்ட காவல் துறையில் அமைச்சுப் பணியாளராகப் பணியாற்றும் ஜெய்சங்கா் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது சகோதரா் ஜெய்சங்கா் (51) கோவையில் வசித்து வருகிறாா். கடந்த 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை அவரின் குடும்பச் செலவு, தாயாரின் மருத்துவச் செலவுக்காக ரூ.80 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன்.

இந்தப் பணத்தை பலரிடம் கடன் பெற்றும், எனது மகளின் நகைகளை அடகு வைத்தும் வழங்கினேன். அதற்கு அவா் வட்டிக்கூட கட்டவில்லை. அசலும் செலுத்தாமல் உள்ளாா்.

இதனால் கடன் கொடுத்தவா்கள் எனக்கு நெருக்கடி அளித்து வருகின்றனா்.

எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை வாங்கித் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.