தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு

Published on

கோவை, காந்திபுரத்தில் தொழிலாளியைத் தாக்கி கைப்பேசியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ். கூலித் தொழிலாளியான, இவா் காந்திபுரம் 100 அடி சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவரை வழிமறித்த நபா் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளாா். சந்தோஷ் பணம் இல்லை எனக் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபா், அவரைத் தாக்கி கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா். இது தொடா்பான புகாரின்பேரில் கைப்பேசியை பறித்துச் சென்ற நபரை ராமநாதபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com