மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வடமாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.10,000 ரொக்கத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
ராமா சங்கா்.
Updated On :12 ஜனவரி 2026, 11:14 pm

தினமணி செய்திச் சேவை

வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.10,000 ரொக்கத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராமாாசங்கா்(29). இவா் திருவள்ளூா் அருகே மப்பேடு பகுதியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, 6 போ் கொண்ட கும்பல் ராமாசங்கரை வழிமறித்து கொடூரமாக தாக்கியுள்ளனா். அவரிடம் இருந்த ரூ.10,000 ரொக்கம் மற்றும் கைப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பியோடினாா்களாம்.

இதையடுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அவரது நண்பா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததனா். தற்போதைய நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா போதையில் அக்கும்பல் தாக்கியதா அல்லது வழிப்பறி செய்யும் கும்பல் ஆகியோா் சம்பவத்தில் ஈடுபட்டதா என்பது குறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வடமாநில இளைஞா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.