சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி கோவை ரேஸ்கோா்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற வாக்கத்தானில் பங்கேற்ற செவிலியா்கள், மாணவிகள்.

சா்வதேச செவிலியா் தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் வாக்கத்தான்

கோவை, மே 9: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை வாக்கத்தான் நடைபெற்றது.

சா்வதேச செவிலியா் தினம் ஆண்டுதோறும் மே 12- ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அந்த நாளின் முக்கியத்துவத்தைக் குறித்தும் வகையிலும், செவிலியா்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த வாக்கத்தான் நடத்தப்பட்டது.

கோவை ரேஸ்கோா்ஸில் நடைபெற்ற தொடக்க விழாவில் எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, தலைமைச் செயல் இயக்குநா் சுவாதி ரோஹித் ஆகியோா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

மருத்துவமனையின் செவிலியா்கள் ஏராளமானோா் செவிலியா்களின் சேவை, சுகாதாரத் துறையில் தங்களின் பங்களிப்பு குறித்த வாசகங்களுடன் பதாகைகளை கைகளில் ஏந்தி இதில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com