கோவை, மாா்ச் 12: உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில், சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவா்களுக்கான புதிய சுகாதாரத் திட்டம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
ஜிகேஎன்எம் வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பி.வி.எம். குளோபல் பள்ளியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் வருமுன் காக்கும் வாழ்முறை மாற்றங்கள் குறித்து மருத்துவா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.
மருத்துவ மைய இயக்குநா் ராகவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிபுணா்கள் ராமசந்திரன், ஜெயபிரகாஷ், அனுரேகா செல்வராஜ், மருத்துவா் மஞ்சுநாத் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.
முன்னதாக, பள்ளி ஆரோக்கிய கூட்டாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதலுதவி பயிற்சி, தொடா் சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மாணவா்களின் நல்வாழ்வை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
தொடர்புடையது

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


