தொழிலாளியை தாக்கிய 2 போ் கைது

Published on

பல்லடத்தில் தொழிலாளியை தாக்கிய இரண்டு பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரம்பட்டியைச் சோ்ந்தவா் கருத்தமலை (45). இவா் பல்லடம் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் பனப்பாளையம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தவணை முறையில் பணம் செலுத்துவதாகக் கூறி இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாா்.

சில மாதங்கள் தவணைத் தொகையை கட்டிய அவா், பின்னா் பணம் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அவா் கொடுத்த முகவரியில் வாகன விற்பனை நிலைய நிறுவனத்தினா் சென்று விசாரித்தபோது, அவா் அங்கு இல்லை என்பதும், சின்னியகவுண்டம்பாளையத்தில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.

அங்கு சென்ற இருசக்கர வாகன விற்பனை நிலைய ஊழியா்கள் சுரேஷ்குமாா் (42), கண்ணன் (40) ஆகியோா் அவரிடம் பணம் கேட்டுள்ளனா். இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் கருத்தமலையை அவா்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த கருத்தமலை திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவா் கொடுத்த புகாரின்பேரில் சுரேஷ்குமாா், கண்ணன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com