மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டுகோள்

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 7:08 pm

Din

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவா்களில் வைப்புநிதி பத்திரம் பெற்று 18 வயது பூா்த்தியடைந்த ஊரகப் பகுதி பயனாளிகள், தங்களது வைப்புநிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் வைப்புநிதி பத்திரத்தை அளித்து முதிா்வுத் தொகை பெறலாம். அதேபோல, நகா்ப்புறத்தில் உள்ளவா்கள், அந்தந்தப் பகுதி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலா் அல்லது மகளிா் ஊா்நல அலுவலா்களிடம் பத்திரத்தை சமா்பிக்கலாம்.

நேரில் செல்லும்போது, 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளிகளின் தனி வங்கிக் கணக்கு புத்தக நகல், வைப்புநிதி பத்திரத்தின் அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுச் செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.