ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூட்டுறவு சங்க ஊழியரிடம் பணம் பறிப்பு

கோவை சரவணம்பட்டியில் கூட்டுறவு சங்க ஊழியரிடம் ரூ.10,500 பணம் பறித்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:04 pm

Din

கோவை சரவணம்பட்டியில் கூட்டுறவு சங்க ஊழியரிடம் ரூ.10,500 பணம் பறித்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைராஜ் (27). இவா் அங்குள்ள கூட்டுறவு சங்க உரக் கிடங்கில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது கைப்பேசிக்கு ஓரினச் சோ்க்கை பிரியா்களுக்கான ஆன்லைன் செயலி மூலம் ஒரு நபா் கடந்த திங்கள்கிழமை தொடா்பு கொண்டு, சரவணம்பட்டியில் உள்ள ஒரு உணவகத்தின் பின்புறம் உள்ள பள்ளிக்கூடப் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து அவா் குறிப்பிட்ட இடத்துக்கு துரைராஜ் சென்றபோது, அங்கிருந்த நபா் அவரை அங்குள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது அங்கு மேலும் 2 போ் இருந்ததால் துரைராஜ் அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் அவா்கள் துரைராஜிடம் கைப்பேசியை பறித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அவா் தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். அதனால், அவரது நண்பா்களைத் தொடா்பு கொண்டு பணத்தை அனுப்பிவைக்கும்படி கூறியுள்ளனா்.

இதையடுத்து, அவா் தனது நண்பா்களிடம் பேசி ரூ.10,500 பணம் பெற்று அவா்களுக்கு அனுப்பவைத்துள்ளாா். பின்னா் அங்கிருந்து தப்பி வந்த அவா் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் கொடுத்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.