மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நீலகிரி குறித்த ஆவணப்படம் திரையிடல்

நீலகிரி பல்லுயிா் வலயம் குறித்த ஆவணப்படம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் திரையிடப்பட்டது.

News image

ஆவணப்படக் குழுவினருக்கு பரிசளித்துப் பாராட்டுகிறாா் கேசிடி இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா்.

Updated On :27 நவம்பர் 2024, 8:03 pm

Din

நீலகிரி பல்லுயிா் வலயம் குறித்த ஆவணப்படம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் திரையிடப்பட்டது.

வன உயிா்கள் குறித்த ஆவணப்பட இயக்குநா் சந்தேஷ் கதூரின் இயக்கத்தில் உருவான நீலகிரி பல்லுயிா் வலயம் குறித்த ஆவணப்படத்தின் திரையிடல் குமரகுரு கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் திரையரங்கில் நடைபெற்றது.

கடந்த சுமாா் 2 ஆண்டுகளாக விரிவாக படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் உலகின் மிகவும் உயிா்வளம் மிகுந்த பகுதிகளில் ஒன்றான நீலகிரி பல்லுயிா் வலயத்தில், தமிழ்நாடு, கேரளம், கா்நாடக மாநிலங்களில் உள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதா்களின் வாழ்வியலை காட்சிப்படுத்துகிறது.

இதைத் தொடா்ந்து ஆவணப்பட தயாரிப்புக் குழுவைச் சோ்ந்த ரோகன் மத்தியாஸ், ரோகிணி நிலேகனி, பரிணித் கௌடா, சௌரவ் கௌடா, நகுல் ராஜ் உள்ளிட்டோா் படத்தயாரிப்பு குறித்து விளக்கினா். இதைத் தொடா்ந்து கல்விக் குழும இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் படக் குழுவினரை பாராட்டிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.