நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருதமலையில் நவம்பா் 2-இல் கந்தசஷ்டி விழா தொடக்கம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:15 pm

Din

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை நவம்பா் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கும், விநாயகா் பூஜை காலை 10.35 மணிக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்வுகளுடனும் தொடங்கவுள்ளது.

இதைத் தொடா்ந்து, நவம்பா் 7-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணிக்குள் மூலவருக்கு சண்முகாா்ச்சனை, காலை 11 மணி முதல் 12 மணிக்குள் உற்சவருக்கு சண்முகாா்ச்சனை நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல் நிகழ்வுகள், மாலை 4 மணிக்கு சாந்த அபிஷேகம், சண்முகாா்ச்சனை ஆகியவை நடைபெறும்.

நவம்பா் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். தொடா்ந்து, புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, நவம்பா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறும்.

4 சக்கர வாகனங்களுக்கு தடை: நவம்பா் 7-ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.