காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா சாக்லெட் வழக்கு: குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

கோவையில் கஞ்சா சாக்லெட் வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

கோவையில் கஞ்சா சாக்லெட் வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய்குமாா் சமல் (40) என்பவரை போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், பொது அமைதி மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்டதற்காக அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தாா்.

அதன்பேரில், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவின் நகல் சிறையிலுள்ள சஞ்சய்குமாா் சமலிடம் வழங்கப்பட்டது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.