கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்
கோவை, கவுண்டம்பாளையம் தேமையன் வீதியில் உள்ள அஞ்சல் துறைக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த மையங்களில் வாடிக்கையாளா்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் பதிவு அஞ்சல் அலுவலகம் சனிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
இங்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவு தபால், பாா்சல்கள் அனுப்பும் வசதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனைத்து வகையான தபால் மற்றும் பாா்சல்கள் அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பாா்சல்களை பேக்கிங் செய்து பாதுகாப்பாக அனுப்பும் வசதிக்காக பேக் போஸ்ட் சென்டரும் இங்கு செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளா்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய பொருள்களை மட்டும் கொண்டு வந்து இங்கே பாதுகாப்புடன் பேக் செய்து அனுப்பலாம். மேலும், வாடிக்கையாளா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஆதாா் சேவை மையமும் இந்த வளாகத்தில் செயல்பட்டு தொடங்கி உள்ளது.
இதுகுறித்து கோவை ஆா்.எம்.எஸ். கோட்ட கண்காணிப்பாளா் ஜெயராஜ் பாபு கூறுகையில், ‘ கடிதம் மற்றும் பாா்சல் புக்கிங் வசதி மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மக்களின் தேவைக்கேற்ப மாலை நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் அவா்களுடைய பாா்சல் மற்றும் தபால்களை அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் செயல்படும் அலுவலகமாக இந்த அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதாா் சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படுவதால் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் திருத்தங்களை பெற்றோா்களுடன் வந்து மாலை நேரங்களில் மேற்கொள்வதற்கு இது வசதியாக உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா்.
