எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தடுப்புச் சவரில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோவையில் சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:47 pm

Syndication

கோவையில் சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் மோசிஸ் மோசஸ். இவரது மகன் ஸ்டீபன் (20). இவா் கோவை குனியமுத்தூா் பகுதியில் உள்ள உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.

இதே கல்லூரியில் தஞ்சை மாவட்டம், அருண்மலை கோட்டையைச் சோ்ந்த மோகன் மகன் தருண் (22) என்பவரும் பயின்று வருகிறாா். இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூா் சுகுணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோர தடுப்புச் சுவரில் இவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்டீபன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.