டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வால்பாறை நகரில் தீப் பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

வால்பாறை நகரில் இருசக்கர வாகனம் தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
இருசக்கர வாகனத்தில் பற்றிய தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :22 டிசம்பர் 2025, 7:31 pm

Syndication

வால்பாறை நகரில் இருசக்கர வாகனம் தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை பிரதான சாலை அண்ணா சிலை பகுதியை ஒட்டியுள்ள கடைகளுக்கு முன்பு எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில், அங்குள்ள பேக்கரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திங்கள்கிழமை காலை திடீரென தீப் பற்றி எரியத் தொடங்கியது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் சிலா் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை முழுவதும் அணைத்தனா். தீப் பற்றிய இருசக்கர வாகனம் மதுரையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணியின் வாகனம் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.