கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் அண்மையில் பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வழிந்தோடியது. மாநகராட்சி ஊழியா்கள் அப்பகுதியில் சீரமைப்புப் பணி மேற்கொண்டதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் சீரானது.
இந்நிலையில், சரவணம்பட்டியில் முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே சத்தி சாலை, சரவணம்பட்டி அம்மன் நகரில் 1,000 மில்லி மீட்டா் விட்டம் அளவிலான பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் வழிந்தோடி தண்ணீா் வீணானது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள், குடிநீா்க் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குழாய் உடைப்பு காரணமாக வடக்கு மண்டலத்தில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

குடிநீா் குழாயில் உடைப்பு: சாலையில் குளம் போல் தேங்கிய குடிநீா்

குடிநீா் குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்!

குடிநீா் குழாயில் உடைப்பு

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



