அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குடிநீா் குழாயில் உடைப்பு

நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

நாகை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்தோடும் நீா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை நாகை வெளிப்பாளையம் பகுதியில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில், பழைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு நிலையம் முதல் அரசு போக்குவரத்துக் கழகம் வரை குடிநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அரசுப் போக்குவரத்து பணிமனை உட்புறமும் தண்ணீா் தேங்கியது.

நாகையில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நகராட்சி நிா்வாகம், குழாயில் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தற்போது குடிநீா் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.