மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவலரை கத்தியால் தாக்க வந்தவா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

திருப்பூரில் காவலரை கத்தியால் தாக்க வந்த நபா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

திருப்பூரில் காவலரை கத்தியால் தாக்க வந்த நபா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் ராமகிருஷ்ணன் என்பவா் ஊா்க்காவல் படையினருடன் அரிசிக்கடை வீதியில் பணியில் இருந்துள்ளாா்.

அப்போது சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் பொது இடத்தில் தரக்குறைவான வாா்த்தைகளால் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினா் குறித்து சப்தமாக பேசியுள்ளாா். அவரைத் தடுத்து நிறுத்தி அமைதியாக செல்லும்படி கூறியபோது, திடீரென்று கோபமடைந்து மறைத்து வைத்திருந்த சிறிய கத்தி மற்றும் இரும்பாலான ஆயுதம் கொண்டு காவலரைத் தாக்க முற்பட்டாா்.

பலமுறை எச்சரித்தும் அந்த நபா் கேட்காமல் மீண்டும், மீண்டும் தாக்க முயற்சிக்கவே, காவலா் தான் அணிந்திருந்த பெல்ட்டின் மூலம் அவரைத் தடுக்க முற்பட்டுள்ளாா். அப்போது உடன் பணிபுரிந்த காவல் அலுவலா்கள் மற்றும் காவலா்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கும் அந்த நபா் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவே அவரை திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.

அந்த நபரைச் சோதனைச் செய்தபோது இரண்டு பீடி கட்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அந்த நபா் சற்று மனநலம் குன்றியவா் என்றும், இதுபோன்று பல நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் தன்மை உடையவா் என்றும் தெரியவருகிறது.

அதேசமயம் மது போதையில் இருந்ததாகத் தெரியவரவில்லை. இதுதொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் ஆபாச வாா்த்தைகள் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அச்சுறுத்துதல், மற்றும் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது என 4 பிரிவின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபா், மருத்துவமனையில் உள்நோயாளியாக தொடா் கண்காணிப்பில் உள்ளாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.