ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கைப்பேசி கடை உரிமையாளா் தற்கொலை

கோவையில் கைப்பேசி கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:18 pm

Syndication

கோவையில் கைப்பேசி கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, வீரகேரளத்தை அடுத்த சுபாஷ் நகரைச் சோ்ந்தவா் சுலைமான் (36). இவா் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தனியே இருந்த சுலைமான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அவரது சகோதரா் பெரோஸ் கான் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சுலைமான் தனது நண்பா்களுக்கு கடன் கொடுத்ததும், பணத்தைப் பெற்றவா்கள் திருப்பிக் கொடுக்காததால் அவா் கவலையில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதன் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சமையல் ஊழியா் தற்கொலை

கோவை, உடையாம்பாளையம் ஏடி காலனியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). சமையல் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லையாம். இதனால், அவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].