மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கூட்டத்தில் பங்கேற்ற பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா்.
Updated On :3 பிப்ரவரி 2025, 10:41 pm

Din

கோவை: பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம், கோவை மாவட்ட கலை, இலக்கிய, தமிழ், சமுதாய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தெய்வத்தமிழ் வழிபாட்டாளா்கள் ஆகிய அமைப்புகளின் கூட்டுக் கூட்டம், பேரூா் தமிழ்க் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினாா். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட கலை, இலக்கிய, தமிழ், சமுதாய அமைப்பு தாய்மொழி நாள் பேரணி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறுகிறது. பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்குத் திருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.