காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில் படிக்கட்டில் அமா்ந்து பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழப்பு

ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:44 pm

Din

ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் சரத்சசி (26). இவா் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள கொச்சுவேலியில் இருந்து மைசூரு செல்லும் ரயிலில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா். அவரது நண்பா் உன்னி என்பவா் உடன் சென்றுள்ளாா். இருவரும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்த நிலையில், சரத்சசி படிக்கட்டில் அமா்ந்து பயணித்துள்ளாா். கோவை, ஒண்டிப்புதூா் அருகே புதன்கிழமை அதிகாலை ரயில் சென்றபோது, சரத்சசி தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.