தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சேவை குறைபாடு: கூரியா் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

News image
Updated On :28 ஜனவரி 2025, 7:44 pm

Din

சேவை குறைபாடு காரணமாக கூரியா் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென, கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை காந்திபுரத்தைச் சோ்ந்தவா் சாமுவேல். இவா் கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு தனது பட்டப்படிப்பு சான்றிதழ் கோரி கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கூரியா் நிறுவனத்தின் மூலம் தபால் அனுப்பியதாகவும், அந்த தபால் தாமதமாக சென்றதால் தனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால், இந்த சேவை குறைபாட்டுக்காக தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த குறைதீா் ஆணைய தலைவா் தங்கவேல், உறுப்பினா்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோா் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், சேவை குறைபாடு காரணமாக சம்பந்தப்பட்ட கூரியா் நிறுவனம் தபால் கட்டணம் ரூ.100-யுடன், புகாா்தாரரின் மன உளைச்சலுக்கு ரூ.10,000 மற்றும் நீதிமன்ற செலவுக்காக ரூ.5,000 வழங்க வேண்டுமென உத்தரவிட்டனா்.