போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2025, 2:01 am IST

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, காட்டூரில் அண்மையில் நடைபெற்றது.

இதில், அமைப்பின் மாநில பொதுச் செயலா் ஜே.எஸ்.கிஷோா்குமாா் பேசியதாவது: இந்து முன்னணி நடத்திய முருக பக்தா்கள் மாநாடு தமிழகத்தில் ஹிந்துக்களிடையே எழுச்சியையும், ஒற்றுமையையும் உருவாக்கியுள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளும், கோவை மாவட்டத்தில் 5,001 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

கோவையில் நடைபெறும் விசா்ஜன ஊா்வல பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை ஏற்கிறாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை பங்கேற்க உள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு காவல் துறையினா் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிா்க்க வேண்டும். கோவை, சொக்கம்புதூா் பகுதியில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதைத் தடை செய்யக் கோரி கோவை மாநகராட்சி அலுவலகம் முன் வரும் 25-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்.

கூட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், மாவட்டத் தலைவா் தசரதன், கோட்ட பொதுச் செயலா் பாபா ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலா் ஜெய்சங்கா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி.தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.