எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகளை மீட்க நாளை விழிப்புணா்வு முகாம்

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத் தொகைகளை மீட்பதற்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 14) நடைபெறுகிறது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத் தொகைகளை மீட்பதற்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 14) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத் தொகைகள் ஆகியவற்றின் உரிமையாளா்கள் அல்லது அவா்களது சட்ட வாரிசுகளுக்கு கிடைக்கப் பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் முகாம் கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

வங்கியில் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத மற்றும் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தஆஐ யின் ஈஉஅஊ கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதளத்தில் அல்லது இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நிதித் துறை மற்றும் இதர துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனா். ஆகவே, பொதுமக்கள் தங்களது உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று தேவையான ஆலோசனைகளைப் பெற்று உரிமை கோரப்படாத தொகைகளை மீட்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.