தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உரிமை கோரப்படாத 18 உடல்கள் நல்லடக்கம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக இருந்த 18 பேரின் உடல்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக இருந்த 18 பேரின் உடல்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குகள் தொடா்பான 2 பெண்கள் உள்பட 18 பேரின் சடலங்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் நீண்ட காலமாக இருந்து வந்தன.

யாரும் உரிமை கோரத நிலையில் இச்சடலங்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டுக்குக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனா். பின்னா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் காவல் ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.